வியாழன், 28 ஜூலை, 2016

இலக்கியப் பட்டறை

தேசியக் கல்விக் கழகமும் தேசியக் கலைகள் மன்றமும் இணைந்து நடத்தும் ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி உடனிருந்து பயிற்றுவித்தல்’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக படைப்பாக்கத் திறன் மேம்பாட்டிற்கான இலக்கியப் பட்டறை ஒன்று 28 ஜூலை 2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தப் பட்டறையில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான நூர் (5T) மற்றும் தனிஷ்கா (5R) கலந்துகொண்டார்கள். 


இந்தப் பட்டறையைப் பிரபலத் தமிழ் எழுத்தாளரான திரு.ஜெயமோகனும் சிங்கப்பூர் எழுத்தாளரான குமாரி.கனகலதாவும் வழிநடத்தினார்கள். பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள் எழுத்தாளர்களிடமிருந்து படைப்பாக்கத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் தரமான இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கும் தேவைப்படும் உத்திகளை அறிந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக