வியாழன், 28 பிப்ரவரி, 2013

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 18/02/2013

இவ்வாண்டுக்கான முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல், சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் PAL அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.










அங்கு, அவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி, பம்பரம் ஆகிய விளையாட்டுகள் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். தங்கள் குழுவுக்கென்று ஒதுக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டினை மாணவர்கள் விளையாடினார்கள். அவர்களுக்குத் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் வழிகாட்டினார்கள். மொத்தத்தில், அன்றைய மாணவர்க்கூட்டம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது எனலாம்.

 
 






 


சொற்போர் 2013 தேர்வுச்சுற்று

16/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2013 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்று தொடங்கியது. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். 

(ஜோஷிகா (6T), ஷாலினி (6T), ஜீவிதா (5O), டிவாஷினி (5R), அல்மீரா (5O))

'மகிழ்ச்சியான வாழ்க்கைக்குப் பணம் அவசியம்' என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள்.

 
நம் பள்ளி மாணவி, ஜோஷிகா வர்மா (6T) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!

 

 

 

 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு'

இவ்வலைப்பூவில் அண்மையில் 'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு' என்ற வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அதில் தொடக்கநிலை 5 மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு வாக்களித்தார்கள். அதன் முடிவுகள் இதோ:
தங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாகப் பல மாணவர்கள் ஆடுபுலி ஆட்டத்திற்கே வாக்களித்திருந்தார்கள். அவ்வகுப்பு மாணவர்களில் பலரையும் அவ்விளையாட்டு வெகுவாகக் கவர்ந்தது எனலாம்.

தமிழ்க் கருத்தறிதல் பட்டறை

22-01-2013 அன்று தொடக்கநிலை 5 மற்றும் தொடக்கநிலை 6 மாணவர்களுக்கு கருத்தறிதல் பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஒன்றரை மணி நேரப் பட்டறையில் ஏன்’, ‘எவ்வாறுமுதலிய கேள்வி வகைகள் குறித்தும் அக்கேள்வி வகைகளுக்குப் பதிலளிக்கும் உத்திகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. இப்பட்டறையின்போது, மாணவர்கள் பகுதிகளிலிருந்து பதில்களை அடையாளம் காணுதல், அவற்றைக் கேள்வி வகைக்கு ஏற்ப பதிலளித்தல் முதலிய நடவடிக்கைகளில் தங்கள் குழுக்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

கருத்தறிதல் பட்டறையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: